சேலையில் வந்த நயன்தாரா.. பயங்கரமாக கூடி தமிழகத்தின் பெயரைக் கெடுத்த சேலத்து ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் பிரபல துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா வந்திருந்ததால், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல துணிக்கடை ஒன்றின் 21-வது கிளையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்க நடிகை நயன்தாரா வந்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நயன்தாரா வந்ததால், அவரைப் பார்க்க இளைஞர்கள், ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரளாக அங்கு குவிந்தனர்.

இதனால், அங்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்லக் கூட வழி விட முடியாத அளவிற்கு 3 மணி நேரம் அந்த இடமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள், கல்லூரி மாணவியின் 3 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.

அலைமோதிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார், பொதுமக்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் தடியடி நடத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த நயன்தாரா, கடையைத் திறந்து வைத்து விட்டு, அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கிருந்து அவர் கிளம்பியதும், அவரைப் பார்க்க அங்கிருந்த மக்கள் கூட்டம் நாற்காலிகளை கீழே தள்ளிவிட்டும், கையில் எடுத்துக் கொண்டும் மேடையின் பின்னால் ஓடினர்.

இவ்வாறு நயன்தாரா வருகையில் காலை முதல் மதியம் வரை சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியே மக்கள் கூட்டத்தில் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+