கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்.. வெள்ளப் பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்
கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Recommended Video

திருவையாறு: கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கொள்ளிடம் ஆற்று வெள்ளப்பெருக்கைக் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து வருகிற உபரி நீர் அப்படியே காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. அதே போல, கேரளா அணையிலிருந்து திறக்கப்படும் நீரும் காவிரியில் கலந்து மேலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால், காவிரியில் 2.50 லட்சம் கன அடி நீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு காரணமாக 90 ஆண்டு பழமை வாய்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பழைய பாலம் இடிந்து விழுந்தது.
காவிரியின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியின் கிளை ஆறு கொள்ளிடத்திலும் நீர் திறக்கப்பட்டு 2.50 லட்சம் கன அடி நீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் வெள்ளப் பெருக்கைக் காண பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு விலாங்குடியிலிருந்து அரியலூர் மாவட்டம் திருமானூரை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளப் பெருக்கை கண்டு கண்டு மகிழ்ந்தனர். சிலர் தங்களுடைய மொபைல் போன்களில் வீடியோ, போட்டோ எடுத்துக்கொண்டனர்.
அங்கே வெள்ளப் பெருக்கை காண வந்த ஒருவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படாது. ஆனால், இந்த ஆண்டு பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கைக் காண குடும்பத்துடன் வந்துள்ளோம். கொள்ளிடத்தில் இந்தளவுக்கு வெள்ளப் பெருக்கைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
விலாங்குடி - திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் வெள்ளப் பெருக்கை காண வந்த மற்றொருவர் கூறுகையில், கொள்ளிடத்தில் 2.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் மொத்த தண்ணீரும் கடலில் கலக்கப் போகிறது என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழக அரசு சிறிய அளவிலான தடுப்பனைகளைக் கட்டி பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications