நாளை வருகிறார் மோடி.. வண்டலூரில் எங்கு பார்த்தாலும் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் பேசவுள்ளதால் சென்னை வண்டலூரில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வண்டலூர்ப் பகுதியில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலையாகவே காணப்படுகிறது.

சென்னைப் போலீஸாரை விட வெளியூர்களைச் சேர்ந்த போலீஸார்தான் பெருமளவில் காணப்படுகின்றனர்.

நாளை சென்னையில் மோடி பேச்சு

நாளை சென்னையில் மோடி பேச்சு

சென்னை வண்டலூரில் நாளை நடைபெறும் பாஜக கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

திருச்சிக்கு அடுத்து

திருச்சிக்கு அடுத்து

தமிழகத்தில் அவர் இதற்கு முன்பு திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதலில் பேசினார். தற்போது சென்னையில் பேசவுள்ளார்.

போலீஸ் போலீஸ் போலீஸ்

போலீஸ் போலீஸ் போலீஸ்

மோடி வருகையையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வண்டலூர் முழுவதும் போலீஸ் தலையாகவே காணப்படுகிறது.

விமான நிலையம் முதல்

விமான நிலையம் முதல்

சென்னை விமான நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து மோடி கூட்டம் நடைபெறும் திடல் வரை போலீஸார் குவிந்துள்ளனர்.

குஜராத் போலீஸாரும்

குஜராத் போலீஸாரும்

நம்ம ஊர் போலீஸார் போதாது என்று குஜராத்திலிருந்தும் கணிசமான அளவில் போலீஸார் வந்துள்ளனர். அவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைவர்களுடன் ஏடிஜிபி ஆலோசனை

தலைவர்களுடன் ஏடிஜிபி ஆலோசனை

முன்னதாக மோடிக்கான பாதுகாப்பு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், மோகன்ராஜுலு, சக்கரவர்த்தி ஆகியோர் கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+