For Daily Alerts
Just In
தொடர்மழை: என்.எல்.சியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்-மின் உற்பத்தி பாதிப்பு
இதேநிலை நீடித்தால் மேலும் மின் உற்பத்தி குறைந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுவைக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையில் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
சுரங்கத்தில் தண்ணீர்
தொடர் மழையால் என்.எல்.சி சுரங்கத்தில் தண்ணீர் தேங்குவதால் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது.
குறைந்த மின் உற்பத்தி
2 ஆயிரத்து 490 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி படிப்படியாக ஆயிரத்து 300 மெகாவாட் குறைந்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்தத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி, மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
English summary
Power generation at the Public sector Neyveli Lignite Corporation (NLC) has come to a standstill, thanks to heavy rains, which affected the mining operation.
Story first published: Monday, October 20, 2014, 14:42 [IST]