தொடர்மழை: என்.எல்.சியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்-மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

இதேநிலை நீடித்தால் மேலும் மின் உற்பத்தி குறைந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுவைக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையில் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
சுரங்கத்தில் தண்ணீர்
தொடர் மழையால் என்.எல்.சி சுரங்கத்தில் தண்ணீர் தேங்குவதால் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது.
குறைந்த மின் உற்பத்தி
2 ஆயிரத்து 490 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி படிப்படியாக ஆயிரத்து 300 மெகாவாட் குறைந்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்தத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி, மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications