திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் வெள்ளப்பெருக்கு.. மழை நீர் ஊருக்குள் புகுந்தது
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று பகல் பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம், பூம்புகார்,பழையாறு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் மேல சேத்தியில் உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் மேலமருதூர், வடபாதி, தென்பாதி, பிராந்தியக்கரை, மணக்காடு, கரியாப்பட்டினம், தாணிகோட்டகம், பிச்சகொட்டகம், காரமடை உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகள் அடுக்கி அடைக்க முயன்றனர். ஆனால் இரவில் பலத்த மழை பெய்ததால் முழுவதுமாக அடைக்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் அடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, ஆற்றில் மண்டிக்கிடக்கும் கோரை புற்கள், ஆகாயதாமரை ஆகியவற்றை அகற்றி, ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications