தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு அதிக கனமழை கொட்டும்: எச்சரிக்கும் ரமணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை, வடதமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் சென்னை நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான செங்குன்றம், மாதவரம், புழல், கொளத்தூர், ராஜாமங்கலம் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பகல் 2 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக செங்குன்றத்தில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு கனமழை

இன்று காலை முதல் பூந்தமல்லி அடுத்த மாங்காடு, குன்றத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மதியம் முதல் கன மழை பெய்தது. ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பரங்கிமலை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, ஆகிய பகுதிகளில் காலை முதல் விட்டு, விட்டு மழை கொட்டி வருகிறது. இதனால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக கனமழை கொட்டும்

அதிக கனமழை கொட்டும்

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்றார். கடலோர மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று கூறிய அவர், இலங்கை, வடதமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வுநிலை நீடிப்புதாக கூறினார்.

8ம் தேதிவரை மழை

8ம் தேதிவரை மழை

மொத்தத்தில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தையும் சேர்த்தால் 5 நாட்களுக்கு மழை உண்டு. அடுத்த 24 மணி நேரம் என்பது நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையாகும். ரமணன் சொல்வது படி பார்த்தால் சென்னையில் 5ம் தேதி வரை மழை உள்ளது.

அதிக மழை பொழிவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆகும். ஆனால் இதுவரையில் பெய்த மழை அளவு 52 செ.மீ. அதாவது வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31ந் தேதி வரை உள்ளது என்றும் ரமணன் கூறினார். இன்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பரங்கிப்பேட்டையில் 16 செ.மீ; மரக்காணத்தில் 15 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+