தொடர் மழை: நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக உதகை,கூடலூர் பந்தலூர் தாலுக்காக்களில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே கோவை மாவட்டம் வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையினால், சோலையாறு, காடம்பாறை, அப்பர் ஆழியாறு ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர் மழை
வால்பாறைசுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலை 8 மணிவரை சோலையாறு 87 மி.மீ, வால்பாறை 44 மி.மீ, கீழ் நீராறு 62 மி.மீ, மேல் நீராறு 94 மி.மீ, மழை அளவு பதிவாகியுள்ளது.

சோலையாறு அணை
தொடர்மழை காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 163.12 அடியானது. ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது.

வெளியேற்றப்படும் தண்ணீர்
அணைக்கு வினாடிக்கு 4,147 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 3,214 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு வினாடிக்கு 2,770 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

'பரம்பிக்குளம் அணை நீர் மட்டம்
பரம்பிக்குளம் அணைப்பகுதியில் 48 மி.மீ., மழை பெய்துள்ளது. சோலையாறு அணையிலிருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 66.15 அடியாக உயர்ந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கு வினாடிக்கு 3,357 கன அடி வந்து கொண்டிருக்கிறது; 656 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணை ஓரிரு நாளில் நிரம்பும் தருவாயில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications