தொடர் மழை: கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டுகிறது. நடப்பாண்டில் ஜூன் 1-ல் பருவமழையானது தொடங்கியது.

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழையால் கன்னியாகுமரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திலும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications