சென்னையில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 5 பேர் சாவு
சென்னை: கன மழை தொடர்பான பாதிப்புகளில் சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுவர் இடிந்தது, வெள்ளத்தில் மூழ்கியது, மின்சாரம் தாக்கியது போன்ற பல்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின், பல பகுதிகளில் கழுத்தளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோன்ற அசாதாரண நிகழ்வுகளால், சென்னையில் இன்று காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட சென்னை பகுதியான, புளியந்தோப்பில், நீரில் மூழ்கி, சேகர் என்பவர் உயிரிழந்தார். புழல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ரயில்வே முன்னாள் ஊழியர் கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
பழவந்தாங்கல் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மின்சாரம் தாக்கி, பிரதீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், தரமணியை சேர்ந்த ராமன், மகாகவி பாரதிநகரை சேர்ந்த காதர் மைதீன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications