சென்னையில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 5 பேர் சாவு
சென்னை: கன மழை தொடர்பான பாதிப்புகளில் சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுவர் இடிந்தது, வெள்ளத்தில் மூழ்கியது, மின்சாரம் தாக்கியது போன்ற பல்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின், பல பகுதிகளில் கழுத்தளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோன்ற அசாதாரண நிகழ்வுகளால், சென்னையில் இன்று காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட சென்னை பகுதியான, புளியந்தோப்பில், நீரில் மூழ்கி, சேகர் என்பவர் உயிரிழந்தார். புழல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ரயில்வே முன்னாள் ஊழியர் கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
பழவந்தாங்கல் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மின்சாரம் தாக்கி, பிரதீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், தரமணியை சேர்ந்த ராமன், மகாகவி பாரதிநகரை சேர்ந்த காதர் மைதீன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications