பயங்கர இடி... செம மழை... கிருஷ்ணகிரி மக்கள் குஷியோ குஷி - வீடியோ

வெப்பசலனத்தின் காரணமாக கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத கோடை வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பல பகுதிகளில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பநிலை உயர்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர்.

 Heavy rain in Krishnagiri and in Ulundurpet

இந்நிலையில் வெப்பசலனத்தால் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநெல்வேலி ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குஷியாக உள்ளனர்.

நேற்று, கிருஷ்ணகிரி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதுவரை வெயிலால் கஷ்டப்பட்டு வந்த மக்கள் இந்த திடீர் மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இடி, மழை காரணமாக பலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இநிலையில் அங்கு நேற்று பெய்த மழையின் காரணமாக மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். வெப்பசலனத்தின் காரணமாகப் பெய்யும் மழை வறட்சி மிகுந்த இடங்களில் பெய்ய வேண்டும்மென்பதே மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+