For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Many parts of Tamilnadu will see heavy rain today evening and night

    சென்னை: தஞ்சை: தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீர், திடீர் என கூடும் கருமேகங்கள் டெல்டா மாவட்டங்களை நனைத்து வருகின்றன.

    தஞ்சையில் நேற்று இரவு 7மணி முதல் இரவு 11 வரை வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையில் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    heavy rain lashed many places in cauvery delta districts

    தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தண்ணீர் பல இடங்களில் குளம் போல் தேங்கி காணப்பட்டது.

    ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்

    நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்றும் லேசான தூறலுடன் மழை பெய்தது. இதேபோல் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த சுறைக்காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

    English summary
    heavy rain lashed many places in cauvery delta districts ( tanjore, thiruvarur, nagai, pudukottai)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X