சென்னை மற்றும் புறநகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை #Chennai
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 1.30 மணி நேரத்திற்கும் மேலமாக நள்ளிரவில் பெய்த கனமழை 61.5 மி,மீ அளவுக்கு பதிவாகியுள்ளது.
தென் மேற்கு பருவமழை காலம் இன்னும் முடிவடையவில்லை. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சாந்தோம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதோபோல் வடபழனி, சாலிகிராமம் வேளச்சேரி, அடையாறு, கிண்டி, மீனம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், சோழிங்கநல்லூர், பட்டினப்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை 61.5 மி. மீ அளவாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.












Click it and Unblock the Notifications