வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் கனமழை - வானிலை மையம்
வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் விட்டு விட்டு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று காலை முதலே பலத்த மழையும், அவ்வப்போது சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கி இரவு வரை விட்டு விட்டு பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா, சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டதாக கூறினார். அந்த காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலுக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

வங்கக் கடலில் காற்றழுத்தம்
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.

ராமேஸ்வரத்தில் அதிகமழை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக ராமேஸ்வரத்தில் 14 செமீ மழையும், செம்பரம்பாக்கம் 12 செமீ,சென்னை விமான நிலையம் 10 செமீ, சீர்காழி 10 செமீ காஞ்சிபுரம் 9 செ.மீ., வேதாரண்யம் 9 செமீ மழை அளவும் பதிவாகியுள்ளது என்றும் ஸ்டெல்லா கூறினார்.

விட்டு விட்டு பெய்யும் மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30 முதல் தொடங்கி பெய்து வருகிறது. தொடக்கத்தில் கொட்டித்தீர்த்த மழையால் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இடைவெளி விட்டு மீண்டும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications