நெல்லையில் விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நெல்லை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை முதல் லேசான சாரல் பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை புதனன்றும் தொடர்ந்து பெய்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் 18.2மிமீ, சேரன்மகாதேவி 16, நாங்குநேரி 222, பாளையங்கோட்டை 16, ராதாபுரம் 19, செங்கோட்டையில் 1, சிவகரி 3, தென்காசி 3.1, நெல்லை 9, ஆலங்குளம் 15.2, விகேபுதூர் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 82.85 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைப்பகுதியில்23 மிமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 7.12 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 36.4 மிமீ மழை பதிவாகியுளளது.
கடனாநதி அணையில் 4.2 மிமீ, ராமநதியில் 2 மிமீ, கருப்பாநதியில் 4.5 மிமீ, வடக்கு பச்சையாறில் 12மிமீ, கொடுமுடியாறு அணையில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் விடிய விடிய மழை பெய்த காரணத்தால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அருவிகளில் யாரும் குளிக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மெயினருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications