கனமழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஆற்றில் உடைப்பு
இதேபோல் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்ததில், தேங்காய்பட்டணம் பொழிமுகம் பகுதியில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது.
500 படகுகள் மாயம்
இதனல் நீரோடி முதல் மீடலம் வரையிலான 16 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் 500க்கும் மேற்பட்ட படகுகளை ஆற்று நீர் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
ரூ.10 கோடி சேதம்
இதன் மொத்த சேத மதிப்பு 10 கோடி ரூபாய் எனத் தெரிவித்த மீனவர்கள், படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் படகுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தேங்காய்பட்டணம் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 18 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
கேரளாவில் கனமழை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக தென் கேரள பகுதியில் கன மழை பெய்தது. திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
அரசு விடுமுறை
சாலைகளிலும், தண்டவாளத்திலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
72 மணிநேரத்திற்கு மழை
கேரளத்தில் மேலும் 72 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மழை
தெற்கு கர்நாடகாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications