சென்னை மற்றும் புறநகரங்களில் காற்றுடன் கனமழை !
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

சென்னை, நெற்குன்றம், மதுரவாயல்,கோயம்பேடு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, தி.நகர். தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல் ஆவடி, அம்பத்தூர், நங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. எதிர்பாராமல் பெய்த கனமழையினால் முன்னெச்சரிக்கை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் சாலைகள் தண்ணீர் தேங்கி இருந்ததால் அலுவலகம் சென்று வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications