சென்னை உட்பட வட மாவட்டங்களை மிரட்டிய இடி: திருவள்ளூர் அருகே அண்ணன் தங்கை பலி
திருவள்ளூர் அருகே இடி தாக்கியதில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருவள்ளூர்: களாம்பாக்கத்தில் இடி தாக்கியதில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவுக்கும் மேல் நீடித்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தில் இடித்தாக்கியது.
இதில் வீட்டிற்கு வெளியே இருந்த அண்ணன் தங்கையான 12 வயது தமிழரசன், 8 வயதான சுரேகா ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் களாம்பாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சோழவரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பொறியியல் மாணவரும் இடித்தாக்கி உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications