சென்னைக்கு வந்தாச்சுதான்.... பெருங்களத்தூரை எப்ப தாண்டுவோம்.... கடும் நெரிசலில் மக்கள் அவதி!
கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பியதால்,பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: நான்கு நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சென்னைக்கு திரும்பியதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வரையில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நிற்பதால் சென்னை திரும்பியவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தங்கி படித்து, வேலை செய்து வருகின்றனர். பண்டிகை, தொடர்விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம்.
சென்னையில் நெரிசல்
ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 11ஆம் தேதி மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.
போக்குவரத்து நெரிசல்
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட பிரச்சினையாக மாறிவருகிறது. இந்நிலையில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பலரும் இன்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பினர்.
வரிசை கட்டிய வாகனங்கள்
இதனால் இன்று அதிகாலை காலை முதல் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதியாக ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாகவும் சேதமடைந்தும் இருப்பதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்தன.
பயணிகள் அவதி
பேருந்துகள், கார்கள், இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலையில் அலுவலகம் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லவும் திட்ட மிட்டிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.