திமுதிமுவென குவிந்த அதிமுகவினர்... டிராபிக் ஜாமில் சிக்கி ஸ்தம்பித்த சென்னை
சென்னை: முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளதையடுத்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ள அ.தி.,மு.க தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருவதால் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, ஜெயலலிதா இன்று பிற்பகலில் ரோசையாவை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

தொடர்ந்து தலைவர்களின் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
இதற்காக அ.தி.மு.க. வினர் வைத்துள்ள பேனர்கள் சென்னையின் முக்கிய நடைபாதைகளை அடைக்க, தொண்டர்களும் குவிந்து வருவதால், போயஸ் கார்டன் சாலை, ஆளுநர் மாளிகை சாலை, அடையாறு அண்ணாசாலை, கட்சி அலுவலகம் காமராஜர் சாலை, ராயப்பேட்டை சாலை, பீட்டர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைக் காணும் ஆவலில் வெளி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களும் சென்னைக்கு திரண்டு வருவதால், அவர்களின் வாகனங்களால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசல் நாளை ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai: Jayalalithaa leaves from Raj Bhavan, en route to garland MGR's statue. #JayaReturns pic.twitter.com/rPV0bcqEGc
— ANI (@ANI_news) May 22, 2015 இதனால் அலுவலகம் செல்வோர், தனியார் ஊழியர்கள், முன்னேற்பாடாக மாற்று வழியைக் கண்டுபிடித்து செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications