மெரினாவில் விழுந்து மக்கள் உயிரிழப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. உயர்நீதிமன்றம் கேள்வி
மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் இருக்கும் மெரினா ஆசியாவின் மிகவும் நீளமான கடற்கரை என்ற சிறப்பை பெற்றள்ளது. தினமும் லட்சக்கணக்கில் இந்த கடற்கரைக்கு மக்கள் வருவார்கள்.

சமீப காலங்களில் இந்த மெரினாவில் சிலர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சில சமயங்களில் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு எதிராக இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதன்படி மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு இருக்கிறது. மேலும் இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications