ஆற்றில் மணல் திருடிய வழக்கறிஞர் கைது - வீடியோ
பரமக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைப்பாண்டியன் மணல் திருடிய வழக்கில் கைது செய்யபப்ட்டார்.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணல் திருடி விற்றதால் கைது செய்யப்படுள்ளார்.
பரமக்குடியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் துரைப்பாண்டியன். இவர் செங்கல் சேம்பர் தொழில் செய்து வருகிறார். அதற்காக மண் எடுக்கும் உரிமமும் பெற்றுள்ளார். அந்த உரிமத்தை வைத்து ஆற்றிலிருந்து மணல் எடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆற்றில் இருந்து மணல் எடுப்பது சம்பந்தமாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்துள்ளன. அதனையடுத்து, போலீஸ் துரைபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
அப்போது துரை பாண்டியன் 16 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி எந்திரம் மூலம் மணல் விற்பனையைச் செய்து வந்தது தெரியவந்தது. அதனால், லாரிகளும் ஜேசிபி எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. துரைப்பாண்டியன் மீது ஏற்கனவே போலீசாரை மிரட்டிய வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications