பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

High Court seeking permission to write the exam in languages in 10th class

இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த ஆண்டு தமிழ் அல்லாது பிற மொழிகளில் தேர்வெழுத அனுமதி கேட்டு, சுமார் 7ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்கள், தாங்கள் விரும்பும் மொழியிலேயே பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+