ஓகி புயல் தாக்கம்: கன்னியாகுமரி ரயில் சேவைகள் மாற்றியமைப்பு
கன்னியாகுமரியில் கனமழையால் ரயில் சேவையில் மாற்றம் குறித்த அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது.
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகொ புயலால் பெய்து வரும் கடுமையான மழை மற்றும் காற்றால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மரங்கள் முறிந்து ரயில் பாதைகளில் விழுந்துள்ளதாலும், மழை நீரில் இருப்புப் பாதைகள் பல இடங்களில் முழ்கி இருப்பதாலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி ஆகிய மார்க்கங்கள் இடையே பல ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் டிசம்பர் 2ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட, பயண நேரம் மாற்றப்பட்ட ரயில் சேவைகள் குறித்து அட்டவணை வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :
டிசம்பர் 1ம் தேதி நாகர்கோவில் - திருவனந்தபுரம், கோட்டயம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - நிலாம்பூர் ஆகிய பாசன்ஞ்சர் ரயில்களும், புனலூர் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டிசம்பர் 2ம் தேதி கோட்டயம் - கொல்லம், கொல்லம் - புனலூர், கொல்லம் - திருவனந்தபுரம் திருவனந்தபுரம் - நாகர்கோவில், புனலூர் - கன்னியாகுமரி மார்க்கங்களில் ஓடும் பாசன்ஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
டிசம்பர் 1ம் தேதி நாகர்கோவில் - மங்கலூர் செல்லும் எர்நாடு எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து கொல்லம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்து உள்ளது.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications