வாக்கு வித்தியாசம்: அதிகபட்சம் திருவள்ளூர் பி.வேணுகோபால், குறைந்தபட்சம் கோவை பி.நாகராஜ்
சென்னை: நேற்று வெளியான லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் டி.ரவிக்குமார் பெற்ற 3 லட்சத்து 5 ஆயிரத்து 69 வாக்குகளை விட, டாக்டர் பி.வேணுகோபால் 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதாவது, 3 லட்சத்து 23 ஆயிரத்து 430 வாக்குகள் வித்தியாசத்தில் பி.வேணுகாபால் வெற்றி பெற்று, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதே நேரத்தில், கோவை தொகுதியில் குறைந்தபட்சமாக 42 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் பாஜக வேட்பாளர்.
அங்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.நாகராஜன், 4 லட்சத்து 31 ஆயிரத்து 717 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 89 ஆயிரத்து 701 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து, 42 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பி.நாகராஜன் வெற்றி பெற்றார். இதுவே, தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றியாகும்.












Click it and Unblock the Notifications