சாலை பணியாளர்களைத் தாக்கிக் கொள்ளை.... சிவகங்கையில் அநியாயம்: வீடியோ
சங்க கூட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சாலை பணியாளர்களைத் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன், பணம் உள்ளிடவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலை பணியாளர் நிர்வாகிகளை வழிமறித்து தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சாலை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த சாலை பணியாளர் நிர்வாகிகள், தங்கள் சங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பும் போது அவர்களை ஒரு கொள்ளையர் கூட்டம் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

ஓரிடத்தில் அவர்களை மறித்து, தாக்கி கையில் இருந்த வாட்ச், மோதிரம், செல்போன் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் எதுவும் வழக்குப் பதியவில்லை என பாதிக்கபபட்டவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் குழப்பங்கள் இருப்பதால், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications