ரயில் டிக்கெட் புக்கிங்கில் இந்தி எஸ்எம்எஸ்.. இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதிலும் இந்தி பதிவு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் ஆங்கிலம் இந்தி மொழியில் பதிவுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் திருநாவலூர், கெடிலம், சேந்தமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த வங்கியின் ஏடிஎம் சென்டரில் இருந்து நேற்று வந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதிவுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம் வெங்கடேசன் கூறும்போது இந்த வங்கியின் வாடிக்கையாளராக கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் பொதுமக்கள் தான் உள்ளனர். இந்த வங்கி ஏடிஎம்மில் கடந்த இரண்டு நாள்களாக வரும் செய்திகளில் தமிழ் எழுத்து இல்லை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் அனைத்து பதிவுகளும் வந்துள்ளது.

இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் கூட தமிழக அரசு உறுதி அளித்துள்ளனர். ஆனால் தற்போது ஏடிஎம் செண்டரில் வரும் ரசீதில் கூட தமிழ் எழுத்து இல்லை.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications