காவிரி: சென்னை காங். அலுவலகம் முற்றுகை: சித்தராமையா உருவபொம்மை எரிப்பு: 25 பேர் கைது

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக இந்து அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காவிரி வாரியம் அமைக்க போராடுகிறது.

Hindu movement tries to blockade Congress Office

ஆனால் கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களுக்கு பதிலடி தர இளைஞர் காங்கிரஸும் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இந்து அமைப்பினர் 25 பேரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+