சென்னை: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை! – பதற்றம்

இந்து முன்னணி அமைப்பின், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே கடை நடத்தி வருகிறார்
நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற சுரேஷ்குமாரை, அடையாளம் தெரியாத நபர்கள், அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரை காப்பாற்ற வந்த மற்றொருவரின் கையையும் மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். காயமடைந்த இருவரும் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த சுரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்ய கோரி இந்து முன்னனி அமைப்பினர், மருத்துவமனைக்கு முன் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தினர். மேலும், இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ள கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் உதவி ஆய்வாளர் அலுவலகம் அருகிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications