For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னை விளக்குமாறால் அடிங்க: பொங்கிய வேட்பாளர்

By Siva
Google Oneindia Tamil News

ஈரோடு: தான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தன்னை மக்கள் துடைப்பத்தால் தாராளமாக அடிக்கலாம் என்று ஈரோடு தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கே.கே. குமாரசாமி போட்டியிடுகிறார். அவர் முனிசிபல் காலனி, வெட்டுக்காட்டுவலசு, பாப்பாத்திகாடு, வில்லரசம்பட்டி, கங்காபுரம், வாய்க்கால்மேடு, சித்தோடு, கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், சொட்டையம்பாளையம், மாமரத்துபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், சி.எஸ்.நகர், கனிராவுத்தர்குளம், சூளை ஆகிய இடங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

இறுதியாக அசோகபுரத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மக்களிடையே வாக்கு சேகரிக்கையில் அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இப்பொழுது அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நீங்கள் என்னை துடைப்பாதாலேயே அடிக்கலாம் என்று மக்களிடம் உணர்ச்சிவசப்பட்டவராய் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Erode lok sabha constituency Aam admi party candidate KK Kumarasamy asked the voters to hit him with broomstick if he fails to keep his promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X