காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்தின விழா காரைக்குடியில் 16-10-15 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜாவுக்கு விருது வழஹ்கப்பட்டது.
விழாவுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை ஏற்றார். மானமாதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.சுப்பையா, காரைக்குடி நகரமன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, துணைத்தலைவர் மெய்யப்பன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, காரைக்குடி நகரமன்ற உறுப்பினர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கடந்த ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அரசு பொதுத்தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அரசு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.