தருமபுரிக்கு போறீங்களா.. டக்கென சர்ப்ரைஸ் தந்த ஒகேனக்கல்.. ஆசை ஆசையாக வந்து குவிந்த மக்கள்.. ஒரே ஜாலி
தர்மபுரி: ஒகேனக்கல்லில், இத்தனை நாட்களும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் ஒகேனக்கல்லுக்கு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.. இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.. குறிப்பாக, சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும், பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பி வருகின்றன.. இதனால் போதுமான நீர்வரத்து உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபினி அணைகள்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும், தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
காவிரி நீர்வரத்து: இதன்காரணமாக, அன்றைய தினம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்தானது, மறுநாளே, வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்துவிட்டது. எனவே, காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்துவருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவிட்டது..
வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் ஆசை ஆசையாக ஒகேனக்கல்லுக்கு வந்த நிலையில், பரிசல் இயக்க தடை என்பதால், ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றார்கள்.. இதனால், அடுத்தடுத்த நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. இதனிடையே, கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும், காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
சரிவு நிலை: நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை, அதாவது, ஆகஸ்ட் 5ம் தேதி நிலவரப்படி, 6500 கன அடியாகவும் சரிந்து காணப்பட்டது..
இந்த நீர் வரத்து குறைவால், கடந்த 3 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது, அதிரடியாக நீக்கப்பட்டதுடன், இன்று முதல் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்தது.. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
எதிர்பார்ப்பு: இனி அடுத்தடுத்த நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications