கன மழை.. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ
சென்னை: கன மழை காரணமாக பொள்ளாச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வால்பாறை, ஆனைமலையிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதன் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோல, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனை மலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. எனவே இந்த பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் மழைக்கு நடுவே, பள்ளிக்கு செல்வது கஷ்டமானது என்பதால் அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications