திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து இருக்கிறது : ஹெச்.ராஜா பேச்சு
திராவிடக்கட்சிகளின் ஆட்சியால் தான் ஆணவக்கொலைகள் அதிகரித்து இருப்பதாக ஹெச்.ராஜாதெரிவித்து உள்ளார்.
காரைக்குடி : திராவிடக் கட்சிகளின் மோசமான ஆட்சியால் தான் தமிழகத்தில் ஆணவக் கொலைகள்அதிகரித்து இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
காரைக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்றுபத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்துக்களின் மனம் புண்படும்படி பேசி இருக்கும்திருமாவளவனை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும், திருமாவளவன் இந்துக்களின் இறை நம்பிக்கையை சிதைக்கும் வகையில் பேசி இருந்தும்இதுவரை காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பா.ஜ.க வன்மையாககண்டிக்கிறது என்றும், திருமாவளவனை கைது செய்து உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்ட சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து கேட்டபோது, தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சியில் தான் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், விரைவில் திராவிடக்கட்சிகளை அகற்றப்படும் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications