கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டே குப்பத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். ராதா, புஷ்பா, பகவதி, வசந்தகுமார், முல்லை ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் தண்டே குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications