அடிச்சு தூக்கிய எடப்பாடி.. டெல்லியில் ‘பாசிட்டிவ் சைன்’ கிடைக்க காரணம் இந்த 4 விஷயங்கள் தானாம்!
சென்னை : அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், 4 விஷயங்களை கருத்தில் கொண்டு பரிசீலித்ததாக தெரிவித்துள்ளது. இந்த 4 விஷயங்கள் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுகவில் இரட்டைத் தலைமையாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ் , ஓபிஎஸ் இடையே கடந்தாண்டு ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்சையும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் முடிவு :இந்நிலையில், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள். இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
எடப்பாடிக்கு அங்கீகாரம் : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை ரெஃபரன்ஸாக கொண்டு பரிசீலித்து இந்த முடிவை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் தாங்கள் பரிசீலித்ததாக குறிப்பிட்ட 4 ஆவணங்கள் இவைதான்:

4 விஷயங்கள் : 1. எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள்.
A. பொதுக்குழு தீர்மானங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.
B. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.
2. சென்னை உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பு.
3. டெல்லி ஐகோர்ட் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பிறப்பித்த ஆணை.
4. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
இந்த கடிதங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகிலா -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!











Click it and Unblock the Notifications