காவிரி வாரியம் வேண்டும்.. மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்காக மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்காக மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொத்தானியபுரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதேபோல் திருத்துறைபூண்டியில் திமுகவினர் சாலை மறியல் செய்து வருகிறார்கள். நாளை நடக்கும் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் இன்றே தயாராகி வருகிறது.
அதேபோல் திருச்சி நீதிமன்றம் அருகே உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் போராடினார்கள். தற்போது இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.