ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி!
ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
வைரமுத்து மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்து திரித்து கூறப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து.

ஆண்டாளின் குழந்தைதான்
இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைரமுத்துவும் ஆண்டாளின் குழந்தைதான் என்றார்.

ஆண்டாள் கூறும் வரை
வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.

ஆதரவு தருவார்கள்
தனது உண்ணாவிரதத்துக்காக யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை என்ற அவர், ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்றார். மேலும் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆன்மிக போராட்டம்
இது ஒரு ஆன்மிக போராட்டம் என்றும் ஜீயர் கூறினார். மேலும் யார் மனதையும் புண்படுத்தக்கூடிய போராட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாதியிலேயே முடித்தார்
கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் 2 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார் ஜீயர். ஆனால் திடீரென தனது உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications