Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு வாடகைக்கு எடுத்து புது மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் புது மனைவியை வாடகை வீடு பிடித்து விபாசாரத்தில் ஈடுபடுத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சந்திரா(வயது 24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அந்த வீட்டிற்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ஏரியாவாசிகள் அங்கு விபசாரம் நடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து நேற்று அவர் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரா உடன் வி.மருதூர் மகாபாரத தெருவை சேர்ந்த வாலிபர் ராமராஜன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சந்திராவையும், ராமராஜனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் புதுப்பெண் சந்திராவையும் அவரது கணவர் கோபிநாத்தே விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ராமராஜனும், கோபிநாத்தும் விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சந்திரா சென்னையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திருமணமான 3 மாதத்திலே மனைவியை கணவன் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+