வீடு வாடகைக்கு எடுத்து புது மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் புது மனைவியை வாடகை வீடு பிடித்து விபாசாரத்தில் ஈடுபடுத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சந்திரா(வயது 24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அந்த வீட்டிற்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏரியாவாசிகள் அங்கு விபசாரம் நடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று அவர் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரா உடன் வி.மருதூர் மகாபாரத தெருவை சேர்ந்த வாலிபர் ராமராஜன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சந்திராவையும், ராமராஜனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் புதுப்பெண் சந்திராவையும் அவரது கணவர் கோபிநாத்தே விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
ராமராஜனும், கோபிநாத்தும் விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சந்திரா சென்னையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
திருமணமான 3 மாதத்திலே மனைவியை கணவன் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications