படிப்புச் செலவுக்காக... மனைவியை "வாடகை"க்கு விட்டு பணம் சேர்த்த கணவர்!
சென்னை: மனைவியின் படிப்புச் செலவுக்காக அவரை வைத்து ஆண்களுக்கு சபல ஆசை காட்டி பணம், நகை திருடிய கணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவரது மனைவி தப்பி விட்டார். அவரையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை காந்தி நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்ரவன் என்ற வாலிபர் ஐஏஎஸ்ஸுக்காக படித்து வருகிறார். இணையதளத்தில் ஒருமுறை பிரவுஸ் செய்து பார்த்தபோது ஒரு இணையதளத்தில் எனது மனைவியுடன் உறவு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று கூறி ஒரு தொலைபேசி எண் தரப்பட்டிருந்தது.

சபலப்பட்டுப் போன ஜெகதீஸ்வரன் உடனே போனைப் போட்டார். மறு முனையில் பேசியவர் வெங்கடரமணன் என்பவர். அவர் ஜெகதீஸ்வரனிடம், எனது மனைவியுடன் தாராளமாக உறவு கொள்ளலாம். ஆனால் அவர் லாட்ஜுக்கோ, ஹோட்டலுக்கோ வர மாட்டார். எங்களது வீட்டுக்கும் நீங்க வரக் கூடாது. உங்க வீட்டுக்கு வரத் தயார். ரெடின்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு வெங்கட்ரமணன், 25ம் தேதி (கடந்த மாதம்) வீட்டுக்கு வாங்க என்று கூறியுள்ளார். அதன்படி மனைவி சிந்துஜாவுடன் வந்துள்ளார் வெங்கடரமணன். வீட்டுக்கு வந்ததும் எனக்குத் தலை வலிக்கிறது காபி வேண்டுமே என்று கேட்டுள்ளார் சிந்துஜா. அதற்கு வெங்கடரமணன், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஜாலியாக போய் காபி சாப்பிட்டுட்டு வாங்க என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். ஜெகதீஸ்வரனும் சிந்துஜாவை அழைத்துப் போயுள்ளார். வீட்டில் வெங்கடரமணன் மட்டும் இருந்துள்ளார்.
காபி சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு திரும்பினார். ஆசையுடன் ஜெகதீஸ்வரன் காத்திருந்தார். ஆனால் சிந்துஜா திடீரென எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜெகதீஸ்வரன் பெரும் ஏமாற்றமடைந்தார். வெங்கடரமணனும், இன்னொரு நாள் வருகிறோம். இப்போது மருத்துவமனைக்குப் போகிறோம் என்று கூறி விட்டு காரில் ஏறி மனைவியுடன் போய் விட்டார்.
கைக்குக் கிடைத்தது... கதையாக அதிருப்தியுடன் இருந்த ஜெகதீஸ்வரன் படுக்கை அறைக்குப் போய் படுக்கலாம் என்று போனார். அங்கு பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைநத் அவர் உள்ளே போய்ப் பார்த்தபோது அங்கு வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 75 பவுன் நகை ஆகியவற்றைக் காணவில்லை. உடனே வெங்கடரமணனுக்குப் போனைப் போட்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார் ஜெகதீஸ்வரன். அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு, போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் நடத்திய துரித விசாரணையில் வெங்கடரமணன் சிக்கினார்.
வெங்கடரமணன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி சிந்துஜா சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஹைதராபாத்தில் வேலை பார்த்தபோது காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல மனைவியுடன் வெங்கடரமணன், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் சிக்கினார். ஆனால் சிந்துஜா நைசாக எஸ்கேப் ஆகி விட்டார்.
சிந்துஜா படித்து வருகிறாராம். அவரது படிப்புச் செலவுக்காகவே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் வெங்கடரமணன். பல பகுதிகளில் இதுபோல இருவரும் மோசடி செய்து பணம், நகைகளைத் திருடியுள்ளனராம்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications