தென்காசி அருகே மனைவியுடன் சண்டை போட்டவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மனைவியுடன் தகராறு செய்து விட்டு சென்ற நபர் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகேயுள்ளது புளியரை கிராமம் கணபதி என்பவரது மகன் ஓட்டல் தொழிலாளியான ஹரிஹர சுப்பிரமணியன் இவருக்கும் பாவூர் சத்திரம் அருகேயுள்ள பட்டமுடையார்புரம் பகுதியை சார்ந்த வெள்ளத்துரை என்பவரது மகள் சுதா என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கும் கடந்த 3மாதங்களுக்கு முன் சிறு சிறு பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதா கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

Husband dies after clashing with wife

இந்நிலையில் நேற்று இரவு மனைவியை கூப்பிட ஹரிஹர சுப்பிரமணியன் சென்றுள்ளார். அப்போது மனைவி ஊருக்கு வர மறுத்துள்ளார். அவர் மனைவியுடன் சண்டைப் போட்டுள்ளார். அப்போது அவரை சிலர் சமாதனம் செய்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பட்டமுடையார்புரம் காட்டுப் பகுதியில் ரத்தகாயங்களோடு ஒருவர் பிணமாக கிடப்பதாக பாவூர் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பாட்டு கிடப்பது ஹரிஹர சுப்பிரமணியன் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஹரிஹர சுப்பிரமணியன் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+