For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போனில் ஆபாச படம் எடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவன் கைது!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மனைவியை ஆபாச படம் எடுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் திரவியம். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. திரவியம் தமது மனைவி குளிப்பதை, ஆடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்து வந்திருக்கிறார். அத்துடன் மனைவியும் தாமும் உல்லாசமாக இருப்பதையும் கூட செல்போன் காமிராவில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தாராம்.

திரவியத்தின் இந்த கேடு கெட்ட வக்கிரத்தை நீண்டகாலம் சகித்துக் கொண்டே இருந்திருக்கிறார் அவரது மனைவி. ஒருகட்டத்தில் திரவியத்தின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பிரிந்து அவர் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறார்.

மனைவி பிரிந்து போன பின்னரும் திரவியம் சும்மா இருக்கவில்லை. தாய் வீட்டில் இருந்த மனைவியை அடிக்கடி நேரில் சந்தித்து தம்முடன் உடலுறவு வைத்துக் கொள்ள வருமாறு வலியுறுத்தி இருக்கிறார். அப்படி வராவிட்டால் தாம் பதிவு செய்து வைத்திருக்கும் அந்தரங்க படங்களை மனைவி என்று கூட பார்க்காமல் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கணவர் திரவியம் மீது போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் திரவியத்தை கைது செய்தனர்.

மேலும் திரவியத்தின் செல்போனில் இருந்த அவரது மனைவியின் அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் திரவியத்தின் செல்போனில் மேலும் 2 பெண்களின் ஆபாச படங்களும் இருந்துள்ளன. அந்த பெண்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
A 33-year-old man named Diraviyam from Chennai was arrested by city police on Friday in a sexual harassment case filed by his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X