சென்னையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது
மதுபோதையில் மனைவியை கல்லைபோட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிகல்லைப்போட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் 50. இவரது மனைவி முபாரக் பேகம் 44. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

அப்துல் ஜாபர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் செய்துகொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் வேலைக்கும் ஒழுங்காக போவதில்லை. குடிப்பதற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் மனைவி முபாரக்கிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை ஜாபர் கண்டபடி அடித்துவிடுவாராம்.
இந்நிலையில், ஜாபர் நேற்றிரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து முபாரக்கிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. நீண்ட நேர தகராறுக்கு பின்னர் முபாரக் தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சண்டைபோட்டு கொண்டிருந்த மனைவி தூங்கிவிட்டதால் ஜாபருக்கு ஆத்திரம் அதிகமாகியுள்ளது. ஒருபுறம் போதையும், மற்றொருபுறம் ஆத்திரமும் தலைக்கேறிய ஜாபர் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து முபாரகின் மீது வீசியுள்ளார்.
இதனால் தலையிலும், மார்பிலும் பலத்த காயம் அடைந்த முபாரக் பேகம் அலறி துடித்து நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை கண்ட ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் பதுங்கி கொண்டார். அத்துடன் மனைவியை கொன்ற விஷயத்தை தனது மகளுக்கு போன் செய்து செய்துள்ளார்.
கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார் முபாரக் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தப்பிஓடி மறைந்திருந்த ஜாபரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications