சென்னையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது
மதுபோதையில் மனைவியை கல்லைபோட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிகல்லைப்போட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் 50. இவரது மனைவி முபாரக் பேகம் 44. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

அப்துல் ஜாபர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் செய்துகொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் வேலைக்கும் ஒழுங்காக போவதில்லை. குடிப்பதற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் மனைவி முபாரக்கிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை ஜாபர் கண்டபடி அடித்துவிடுவாராம்.
இந்நிலையில், ஜாபர் நேற்றிரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து முபாரக்கிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. நீண்ட நேர தகராறுக்கு பின்னர் முபாரக் தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சண்டைபோட்டு கொண்டிருந்த மனைவி தூங்கிவிட்டதால் ஜாபருக்கு ஆத்திரம் அதிகமாகியுள்ளது. ஒருபுறம் போதையும், மற்றொருபுறம் ஆத்திரமும் தலைக்கேறிய ஜாபர் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து முபாரகின் மீது வீசியுள்ளார்.
இதனால் தலையிலும், மார்பிலும் பலத்த காயம் அடைந்த முபாரக் பேகம் அலறி துடித்து நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை கண்ட ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் பதுங்கி கொண்டார். அத்துடன் மனைவியை கொன்ற விஷயத்தை தனது மகளுக்கு போன் செய்து செய்துள்ளார்.
கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார் முபாரக் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தப்பிஓடி மறைந்திருந்த ஜாபரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications