முத்துராக்கு மகளும், ரஞ்சித் குமாரின் கள்ளக்காதலும்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு இரும்புக் கம்பி அடி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கணவரின் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மனைவி இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து இருவரைப் போலீஸார் கைது செய்தனர். ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கொடைரோடு அருகே உள்ள கிராமம் பொம்மணம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது பெரியம்மா மகள் ராதிகா. இவருக்கும், தேவநாதன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் இந்த தேவநாதனுக்கு முத்துராக்கு என்பவரின் மகளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இருவரும் அடிக்கடி கூடினர், குதூகளித்தனர். இது ராதிகா காதுக்கு வந்தது. அதிர்ச்சி அடைந்தார். கணவரைக் கண்டித்தார். ரஞ்சித்குமாரும் கண்டித்துள்ளார்.
இதனால் தேவநாதன் கோபமடைந்தார். மேலும் முத்துராக்கும் கோபமடைந்தார். இதையடுத்து, ஒருமுறை இதுதொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, தேவநாதன், முத்துராக்கு, அவரது உறவினர் முருகேந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராதிகாவை இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ராதிகா படுகாயமடைந்தார்.
இதுகுறித்து ரஞ்சித் குமார் போலீஸில் புகார் கொடுத்தார். அதைப் பதிவு செய்த போலீஸார் தேவநாதன், முத்துராக்கு ஆகியோரைக் கைது செய்தனர். முருகேந்தின் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.