நிலம் அல்ல கடல்.. நாகை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதா?
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும்.

வெளியேறினார்கள்
முதலில் மீத்தேன் திட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருந்தது. கடும் எதிர்ப்பு காரணமாக இதை நிறுத்தினார்கள். அதன்பின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட இருந்தது. அங்கும் எதிர்ப்பு நிலவி போராட்டம் நடந்ததால் இந்த திட்டம் ஜெம் நிறுவனத்தால் கைவிடப்பட்டது.
[தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம் ]

இரண்டு விவசாய நிலம்
இந்த இரண்டும் விவசாய நிலம் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். இங்கிருந்த விவசாயிகள்தான் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடினார்கள். அதன் காரணமாகவே இந்த திட்டம் கைவிடப்பட்டது. விவசாய நிலங்கள் பறிபோய்விடும் என்று போராடினார்கள்.

இப்போது என்ன செய்ய போகிறார்கள்
இந்த நிலையில்தான் தற்போது வேதாந்தா நிறுவனம் இரண்டு இடத்தில் இருந்தும், ஓஎன்ஜிசி ஒரு இடத்தில் இருந்தும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் இந்த முறை நிலப்பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட போவதில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆம் இந்த முறை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளனராம்.

எப்படி செய்வார்கள்
இதை எப்படி செய்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால் நிலத்தில் செய்தால் பிரச்சனை எழும் என்று கடல் பகுதிக்கு அருகில் இந்த திட்டத்தை அரங்கேற்ற இருக்கிறார்கள். இதற்காகத்தான் இந்த முறை நாகை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications