தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம்
டெல்லி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் பிரச்சனை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும்போதே வேதாந்தா குழுமம் நாகப்பட்டினத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துடன் களமிறங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப் புகை மற்றும் நச்சுக் கழிவுகள் வெளியாவதாக அந்த ஊர் மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது சரியாக அரசு கண்டு கொள்ளாத காரணத்தினால், மாபெரும் பேரணியை, மே மாதம் 22ம் தேதி நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு மக்களின் எழுச்சியை கட்டுபடுத்தமுடியாமல் ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமைப்பு
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. தருண் அகர்வால் கடந்த வாரம் தூத்துக்குடி வந்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

புது திட்டம்
இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வைக்குமளவுக்கு இருப்பதாக சந்தேகம் தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று கூறி வேதாந்தா, தூத்துக்குடி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், "நீங்கள் அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து கொள்ளுங்கள், இந்தா பிடியுங்கள், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி தருகிறோம்" என்று மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாகப்பட்டினம்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. நாகை மாவட்டம், கமலாபுரம் உட்பட இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடியது என்று கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தில் 13 உயிர்களை காவு கொண்ட பிறகு வேதாந்தா நிறுவனம் இப்போது நாகப்பட்டினத்திலும் கால்வைப்பதும் போராட்ட களத்தில்தான். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications