தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம்
டெல்லி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் பிரச்சனை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும்போதே வேதாந்தா குழுமம் நாகப்பட்டினத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துடன் களமிறங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப் புகை மற்றும் நச்சுக் கழிவுகள் வெளியாவதாக அந்த ஊர் மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது சரியாக அரசு கண்டு கொள்ளாத காரணத்தினால், மாபெரும் பேரணியை, மே மாதம் 22ம் தேதி நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு மக்களின் எழுச்சியை கட்டுபடுத்தமுடியாமல் ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமைப்பு
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. தருண் அகர்வால் கடந்த வாரம் தூத்துக்குடி வந்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

புது திட்டம்
இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வைக்குமளவுக்கு இருப்பதாக சந்தேகம் தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று கூறி வேதாந்தா, தூத்துக்குடி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், "நீங்கள் அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து கொள்ளுங்கள், இந்தா பிடியுங்கள், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி தருகிறோம்" என்று மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாகப்பட்டினம்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. நாகை மாவட்டம், கமலாபுரம் உட்பட இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடியது என்று கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தில் 13 உயிர்களை காவு கொண்ட பிறகு வேதாந்தா நிறுவனம் இப்போது நாகப்பட்டினத்திலும் கால்வைப்பதும் போராட்ட களத்தில்தான். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications