நான் ஸ்லீப்பர் செல் இல்லை.. கண்ணீர்விட்ட செல்லூர் ராஜூ
நான் ஸ்லீப்பர் செல் இல்லை எனக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர் விட்டுள்ளார்.
திருச்சி: நான் ஸ்லீப்பர் செல் இல்லை எனக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர் விட்டுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் எனக் கூறி தனது விசுவாத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், தான் ஏற்கனவே கூறியபடி ஸ்லீப்பர் செல்கள் இருப்பது உண்மை என்றார். மேலும் அவர்கள் தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் கூறியது போல் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்றுக்கூறி கண்கலங்கினார்.
சசிகலா குறித்து தான் பேசியது தவறாக பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆட்சி தொடரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியமைய சசிகலா உதவி புரிந்தார் என என்னுடைய மனசாட்சியின் படியே கூறினேன் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மனசாட்சியின் படி நான் கூறிய கருத்தை அரசியாலக்கிவிட்டார்கள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.