திருநாவுக்கரசரை யார் என்றே தெரியாது.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொளேர்
காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பும்போது, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன்.
சென்னை: திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என்று தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று இளங்கோவன் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், விரைவிலேயே தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியடைந்துவிடும். இந்த பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முயல்கிறது ஆளும் அதிமுக அரசு என்றார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பும்போது, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன்.
முன்னாள் மற்றும் இன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் நடுவே நடைபெறும் பனிப்போர் இப்போது வீதிக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி இடித்துரைத்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் அதிமுகவுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்பட முனைவதாக இளங்கோவன் குர்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications