சி.எஸ்.கேவில் ஆட வேண்டும்.. தமிழில்தான் பேசுவேன்.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி
சென்னை சேப்பாக்கத்தில் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கடைசி போட்டியில் காட்டிய அதிரடி குறித்து அவர் பேசி இருக்கிறார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார்.
ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார். கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா கேப்டன்
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசினார். அதில் ''கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருப்பது மிகவும் சந்தோசம். இது மிக பெரிய வாய்ப்பு. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் கண்டிப்பாக ஐபிஎல் போட்டியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சிஎஸ்கே
மேலும் சென்னை அணி குறித்தும் பேசினார். அதில் ''சென்னை அணியில் இல்லாததால் எனக்கு வருத்தம். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்
மேலும் ''தமிழக அணியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். அஸ்வின் மிகவும் பெரிய வீரராக மாறிவிட்டார். வாஷிங்டன் சுந்தர் இந்த தொடர் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். விஜய் சங்கரும் நன்றாக ஆடினார்'' என்றுள்ளார்.

ஒரே வாய்ப்பு
மேலும் ''தற்போது இந்திய அணியில் கடுமையான போட்டி இருக்கிறது. ஒரு முறைதான் வாய்ப்பு கிடைக்கும். அப்போதே நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால்தான் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும்'' என்றுள்ளார்.

நம்பிக்கை
மேலும் கடைசி போட்டி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் ''அந்த சிக்ஸ் அடிப்பேன் என்று நம்பிக்கை இருந்தது. கடைசியில் சிக்ஸ் அடித்தால் வெற்றி பெறலாம். எனக்கு தனிப்பட்ட வகையில் சிறந்த இன்னிங்ஸ் அது. இதுபோல ஆடவேண்டும் என்று பல நாள் ஆசை இருந்தது'' என்றுள்ளார்.

தமிழ்தான்
மேலும் களத்தில் தமிழில் பேசுவது ஏன் என்றுள்ளார். அதில் ''களத்தில் தமிழில் பேசுவதே பிடிக்கும். தமிழக வீரர்களுடன் தமிழில் மட்டுமே பேசுவேன். ஆங்கிலத்தில் பேசுவதைவிட தமிழில் பேசுவது இயல்பாக இருக்கிறது'' என்றுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications