நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் புகார்கள்.. டி.ராஜேந்தர் சொல்வதை பாருங்கள்
Recommended Video

சென்னை: சினிமாவில் எந்த நடிகையையும் தொட்டு நடித்ததில்லை என்று இயக்குனர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் உள்ள பல்வேறு நபர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தெலுங்கு திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் பற்றி பாலியல் புகார் தெரிவித்து வந்தார், தனது புகாரை தேசிய அளவில் கவனம் ஈர்க்கச் செய்ய அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார் ஸ்ரீ ரெட்டி.

இந்த நிலையில் இப்பொழுது அவர் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீது பேஸ்புக்கில், பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். பிரபல இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது மறைமுகமாக குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இதன் பிறகு நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மீது குற்றச்சாட்டை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தன்னை மிரட்டுவதாக விஷால் மீதும் குற்றம்சுமத்தியுள்ளார்.
அடுத்து யார் மீது குற்றச்சாட்டு சுமத்துவாரோ என்ற பதட்டம் திரையுலகில் காணப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் டி ராஜேந்தரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் அப்பொழுது தனது கடந்தகால நினைவுகளுக்கு சென்றார்.
நான் திரையுலகில் 1980களில் அறிமுகமானேன். நான் நடித்த எந்தப் படத்திலும் கதாநாயகியை தொட்டு கூட பேசியதில்லை. இயக்குனராக நடிகைகளுக்கு வசனங்கள் சொல்லிக் கொடுக்கும் போது, நடிப்பு சொல்லிக் கொடுக்கும் போது கூட அவர்களை தொட்டு பேசியதில்லை.
நான் மிகவும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்துவருகிறேன். எந்த காலத்திலும் என்மீது கிசுகிசுக்கள் வந்ததில்லை. புகார் கூறுவது ஸ்ரீரெட்டி உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது.
புகாருக்கு ஆளானவர்கள் அது குறித்து தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு வாய் இருக்கிறது, அவர்களிடம் நீங்கள் மைக்கை கொடுத்து கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications