என் பொண்ணு காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் செத்துடுவேன்- கவுண்டர் சங்க நிறுவனர் ரவிக்குமார்
சேலம்: தன் மகள் யாரையாவது காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும்....தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் பாமக சார்பில் சேலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தலித் சமூகத்தைத் தவிர்த்த இதர சமூகத்தின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் பேசியதாவது:
என்னைப் பொறுத்தவரையில் காதலுக்கு நான் எதிரானவன். என் பார்வையில் காதல் என்பது விருப்பம். அதை வீட்டில் சொல்லி கல்யாணம் கட்டி தொலைய வேண்டியது தானே. பெற்றோர்கள் சரியான பொருத்தம் என்றால் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஒரே சாதியில் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ராமதாசுக்கு பிடிக்காது. ஏனென்றால் ராமதாஸ் அவரது மாமன் மகளை காதலித்து தான் திருமணம் பண்ணியிருக்கிறார்.
என் பெண் காதலித்து இன்னொருவனோடு ஓடி விட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் இறந்து விடுவேன். என் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications